தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/ஓய்வை பயனுள்ளதாக்குங்கள்

ஓய்வை பயனுள்ளதாக்குங்கள்

ஓய்வை பயனுள்ளதாக்குங்கள்


ADDED : ஆக 05, 2011 08:08 AM

Google News

ADDED : ஆக 05, 2011 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஓய்வு பெற்றவர்கள் முழு நேரமும் சமூகத்தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். அலுவலகங்களுக்கு செல்லும் காலத்தில் குடும்ப பொறுப்பும் நிறைய இருந்திருக்கும். இப்போது அவற்றை கூடிய வரை குறைத்துக் கொண்டு, அதற்குப் பதில், ஜனங்களுக்கு தொண்டு செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.

* இதுவரை தெரியாவிட்டாலும், இனியாவது வேத சாஸ்திரங்களை தெரிந்து கொண்டு< அதன்படி நடந்து சமூக நன்மைக்காக பாடுபட வேண்டும். இருக்கிற ஓய்வை நன்றாக பயன்படுத்திக் கொண்டு நல்ல விஷயங்களை படித்தும் கேட்டும் தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்வது பெரிய உதவியாகும்.

* நீங்கள் எந்தத் தொழிலைச் செய்தீர்களோ, அதை நாலு ஏழை இளைஞர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுத்து உதவி செய்யலாம். அதிகமாக பென்ஷன் வாங்குபவர்கள், படிப்புச் செலவுக்கும் பணம் வழங்கலாம். ஒன்றிரண்டு பேருக்கு அன்னதானம் செய்யலாம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us