ADDED : அக் 21, 2016 02:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பெனும் விளக்கை ஏற்றி வைத்தால் உலகமெங்கும் இன்பம் என்னும் பிரகாசம் பரவி விடும்.
* உள்ளத்தில் உண்மையின் ஒளி உண்டாகி விட்டால் அது வாக்கிலும் வெளிப்படத் தொடங்கும்.
* அறிவு என்னும் விளக்கை கையில் ஏந்திக் கொண்டால் சிரமம் என்னும் இருள் மனதில் இருந்து அகன்று விடும்.
* கருவறையில் பிரகாசிக்கும் ஒளிவிளக்காக, மக்கள் சேவையில் ஈடுபட்டு வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணியுங்கள்.
- பாரதியார்