ADDED : பிப் 21, 2016 03:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுயநலத்தைக் கைவிடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயமான செயல்களில் ஈடுபடு. எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்.
* எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடாதே. திறமையுள்ளவனிடம் பணியாளனாக இருந்தாவது அந்த தொழிலைக் கற்றுக் கொள்.
* அன்பு எந்த குறையையும் பொறுக்கும். உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.
* மனம் உற்சாகமாக இருந்தால் உடல்நிலை தீவிரமடையும். உடம்பைத் தீவிரப்படுத்தினால் மனம் புத்துணர்வு பெறும்.
-பாரதியார்