இனி கண்ணாடிக்கு பதிலாக சொட்டு மருந்து போதுமே !

உலகளவில் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரஸ்பியோபியா உள்ளது. அதாவது பொருட்களை துல்லியமாக கவனித்து பார்க்கவும், நெருக்கமாக உரைகளை எழுதவும் சிரமப்படுவர்.

சிலர் தெளிவாக வாசிப்பதற்காக மட்டும் கண்ணாடி (ரீடிங் கிளாஸ்) பயன்படுத்துவர்.

இனி இதற்கு அவசியமில்லை. இதற்குப்பதிலாக அர்ஜென்டினா விஞ்ஞானிகள் சொட்டு மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

இதை ஒரு நாளைக்கு சில முறை மட்டும் கண்ணில் ஊற்றினால், பார்வை தெளிவாக இருக்கும்.

இது தொடர்பாக மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு மொத்தம் 766 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், ரீடிங் கிளாஸ் பயன்படுத்தியவர்களை விட, சொட்டு மருந்து எடுத்தவர்கள் கூடுதலாக மூன்று வரிகள் வாசித்தனர்.

இந்த மருந்தில் 'பைலோகார்பைன்' உள்ளது. இது கருவிழி சிறப்பாக செயல்பட்டு பார்வைத்திறனை அதிகரிக்கிறது.