உங்கள் குழந்தை பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் கண்டறிவது எப்படி?
பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் குழந்தைகளின் செயல்பாடுகளில், ஏதேனும் ஒரு மாற்றம் இருக்கும்.
எனவே, வழக்கத்துக்கு மாறாக அமைதியாக மாறுவது, தனிமையாக இருப்பது மட்டுமல்ல; அதிக சேட்டை செய்தாலும், கோபம், கத்துவது என்று இருந்தாலும் உடனடியாக கவனிக்க வேண்டும்.
குளிப்பாட்டும்போது குட் டச், பேட் டச் குறித்து இயல்பாக பேசி, சிறு வயது முதலே புரிய வைக்கவும். யாராவது 'பேட் டச்' செய்தால் அது உன் தவறு இல்லை; அவர்கள் தவறானவர்கள் என தெளிவுபடுத்தவும்.
குழந்தைகள் ஏதாவது ஒரு இடத்துக்கு, உறவினர் வீட்டுக்கு, பள்ளிக்கு போக மாட்டேன், தனியாக செல்ல மாட்டேன் என அடம் பிடித்தாலோ, மீண்டும் மீண்டும் கூறினாலோ, என்னவென கேளுங்க்கள்.
குழந்தைகளுக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கித் தருபவர்கள், வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும், கண்காணிக்க வேண்டியது அவசியம்.
தினமும் குழந்தைகளுடன் அமர்ந்து இன்று யாரை எல்லாம் பார்த்தீர்கள், என்ன விளையாட்டு விளையாடினாய் என இயல்பாக கேட்க வேண்டும்.
கண்டிப்பான தோரணையில் இருந்தால், மனம் விட்டு பேச மாட்டார்கள். யாரேனும் தவறாக நடந்தால், தைரியமாக சொல்ல வேண்டும் என்பதை, வெளிப்படையாக கூறுங்கள்.
என்ன நடந்தாலும் நான் இருக்கிறேன் என்கிற தைரியத்தையும், சூழலையும் குழந்தைகளுக்கு தந்தால், பாதுகாப்பை உறுதி செய்யலாம்.