அடிக்கடி ரத்த தானம் செய்வதால் ஏதாவது பாதிப்பு வருமா?

ரத்த தானம் வழங்குபவருக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும்.

ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்வது உடல் நலத்திற்கு நல்லது. அதனால் பாதிப்பு வராது.

ரத்த தானம் செய்பவரின் உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டும் தான் ரத்தம் வழங்க முடியும்.

ஏதேனும் நோய் இருந்தாலோ, தொடர்ச்சியாக மருந்து எடுத்து வந்தாலோ ரத்தம் வழங்க முடியாது.

ஒவ்வொரு முறையும் ரத்ததானம் செய்யும் போது உடல் நலம் நன்றாக உள்ளதா என சோதிக்கப்படும்.

ரத்தம் சுத்தகரிக்கப்படுவதால் தானம் வழங்குபவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தொடர்ச்சியாக ரத்தம் கொடுக்கும் போது இதய நோய்கள், புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.