எல்.டி.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அழைப்பு
எல்.டி.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : மே 09, 2026 06:30 PM
புதுச்சேரி: எல்.டி.சி., தேர்வுக்கான, இலவச சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு, எஸ்.சி., – எஸ்.டி., மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் அழைப்பு விடுத்துள்ளது.
புதுச்சேரி துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி ரபீந்திரநாத் மோண்டல் செய்திக்குறிப்பு;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், புதுச்சேரி மாநிலத்தில் எஸ்.சி., – எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, எல்.டி.சி., பணியில் சேர எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (11ம் தேதி) முதல் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. அனைத்து வார நாட்களிலும், சிறப்பு வகுப்புகள் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் அனைத்து பாடங்களிலும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு, வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயில விருப்பமுள்ள மாணவர்கள், எண்: 5, முதல் தளம் மூன்றாவது குறுக்குத்தெரு, நடேசன் நகர், புதுச்சேரி – 605005, தொலைபேசி எண்: 0413 2200115, 8870073622, 9629342446 என்ற முகவரியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தை நேரில் அணுகி தங்களது பெயர்களை முன்பதிவு செய்து, இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
