sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 21, 2026 04:28 PM

ADDED : மே 21, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 04:28 PM ADDED : மே 21, 2026 04:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
பிளஸ்1 வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இன்று 21ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:


2026 - 27ம் ஆண்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இன்று 21ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை விண்ணப்பிக்காத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஏனைய பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 27ம் தேதிக்குள் அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அந்தந்த பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us