மதுரைக்கு 2500 ஆண்டு கால
வரலாறு உள்ளது. கி.பி. 550ம்
ஆண்டிற்கு முன்னரே கலாசாரம்
மற்றும் வர்த்தக
முக்கியத்துவம் பெற்ற நகரமாக
விளங்குகிறது. பண்டை காலத்தில்
மதுரை பாண்டிய நாட்டின்
தலைநகரமாக விளங்கியது. மதுரை
மாநகர் முற்காலத்தில்
கடம்பவனம் என்ற வனப்பகுதியாக
இருந்தது. அங்கு கடம்ப
மரத்தின் கீழ் இருந்த சுயம்பு
லிங்கத்தை இந்திரன் வழிபட்டு
கொண்டிருந்தான்.
இந்த விஷயம்
குலசேகரபாண்டிய மன்னனுக்கு
எட்டியது. லிங்கத்தை சுற்றி
கோயில் (மீனாட்சி அம்மன்
கோயில்) மற்றும் கோயிலை சுற்றி
தாமரை வடிவிலான மதுரை
நகரத்தையும் குலசேகர பாண்டியன்
கட்டினான். மதுரை மாநகரை
சிவபெருமான் தேவாமிர்தத்தை
தெளித்து அருள் புரிந்ததால்,
மதுராபுரி என்ற பெயராலும்
அழைக்கப்பட்டது.