தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/வன்னியில் பிரபாகரன் வீடு:புதிய நபர் கேட்கிறார் உரிமை

வன்னியில் பிரபாகரன் வீடு:புதிய நபர் கேட்கிறார் உரிமை

வன்னியில் பிரபாகரன் வீடு:புதிய நபர் கேட்கிறார் உரிமை


ADDED : மே 07, 2010 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2010 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொழும்பு:விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் வன்னியில் வசித்த வீட்டுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபர், உரிமை கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் வந்துள்ள செய்தி:விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு சில காலத்துக்கு முன், வன்னியில் விஸ்வமடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட உடன், அந்த வீட்டை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. தற்போது அந்த வீடு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.



இந்நிலையில், வவுனியாவில் உள்ள முகாமில் வசித்து வரும் ஒரு நபர், பிரபாகரன் வசித்த வீட்டை, தன் வீடு என உரிமை கோரியுள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன், இந்த வீட்டை விடுதலைப் புலிகள் தன்னிடம் இருந்து கட்டாயப்படுத்தி பறித்ததாக தெரிவித்துள்ள அவர், தற்போது அங்குள்ள ராணுவ வீரர்களை வெளியேற்றி விட்டு, வீட்டை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்.புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர், தற்போது சிறைகளில் உள்ளனர். அவர்களிடம் விசாரித்த பின்னர், இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.இருந்தாலும், இந்த செய்தியை ராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us