Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

வழிபாட்டு இடங்கள்

பந்தளம்

 

சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது.

 

மகர சங்கிரம தினத்தில் ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.

 

ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகைபுறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது, வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி கண்கொள்ள அதிசய காட்சி.

 

ஐயனுக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சங்கிரம தினத்தின் அந்திம நேரத்தில் மங்களகரமான தீபாராதனை காண பத்தணம்திட்டா (10 கி.மீ), ஆரமுளா (10 கி.மீ), எருமேலி (52.கி.மீ), ஆகிய இடங்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளன. தங்கும் விடுதி வசதியும் இங்கு உண்டு. இது தவிர பெட்ரோல் பாங்க். பாங்க் வசதி கூட உண்டு.

 

குளத்துப்புழை

 

 

செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது குளத்துப்புழை. சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கோயிலின் வாசல் அமைந்திருக்கும். சன்னதியில் பாலகன் வடிவில் தவழ்ந்த கோலத்தில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

 

விஜயதசமியன்று வித்தியாரம்பம் என்ற பெயரில் இங்கு நடக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பள்ளியில் குழந்தையைச் சேர்த்தால் கல்வியில் குழந்தை தேர்ச்சி பெறும் என்பது ஒரு நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீரும். கோயில் முன்பு மீன்கள் துள்ளி விளையாடும் ஆறும் ஓடுகிறது. குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.

 

ஆரியங்காவு

 

 

கல்யாண கோலத்தில், குமார சொரூபத்தில் ஐயப்பன் குடிகொண்ட கோயில். திருவனந்தபுரத்தில் இருந்து 66 கி.மீ தொலைவில் உள்ள இக்கோயில் தமிழகத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது.

 

செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவுக்கு அடிக்கடி கேரள அரசு பஸ்கள் சென்று வருகின்றன. மதுரையை சேர்ந்த புஷ்கலாதேவி என்ற பெண் இங்கு ஐயனோடு ஐக்கியமானதாக வரலாறு கூறுகிறது. இதன் மூலம் சமபந்தி ஆகியுள்ள மதுரை சவுராஷ்டிர மக்கள் ஆண்டுதோறும் மண்டல பூஜையின்போது இங்கு வந்து ஐயனுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தி விருந்த வைக்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் வண்ணமயமான இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவர்.

 

பதினெட்டாம் படி

 

 

பதினெட்டாம் படி பாலகன் வரலாறு

 

அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது....

 

தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

 

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

 

மகரஜோதியின் தத்துவம்

 

 

இறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது. எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வகமாக வழிபட்டுள்ளான். ‘ரிய வழிபாடு முதலில் தோன்றியது.

 
 

நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால்தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார்.

 

இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதே போல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக காட்சி அளிப்பது, பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று அவர் ஆண்டுதோறம் இந்த கலிகாலத்திலும் ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார்.

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in